Translate

திங்கள், 21 ஜூன், 2021

 கடந்த ஞாயிற்றுக்கிழமை 20/06/2021 அன்று அதிகாலை 4:30 மணிக்கு திரிபுரா மாநிலத்தின் கோவாய் (Khowai) மாவட்டத்தில் மூன்று நபர்கள் Jayed Hossain (30), Billal Miah (28) and Saiful Islam (18) ஒரு வாகனத்தில் 5  கால்நடைகளை ஏற்றி அகர்தலா நோக்கி சென்று கொண்டிருந்தனர் . இவர்களை கண்ட நமஜோய் பரா (Namajoy Para)  என்ற கிராமத்து மக்கள் சிலர் கால்நடை திருடர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் அனைவரையும் மிகக்கடுமையாக தாக்கியுள்ளனர். ஒருவர் மட்டும் தப்பி செல்ல முயன்றார் அவரையும் சிறிது தூரத்தில் வேறொரு பிரிவினர் மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர் . சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் மூவரையும் சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் பின்பு அங்கிருந்து அகர்தலா அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள்  இறந்துவிட்டதாக கூறினார். இந்த வழக்கு கல்யாண்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ள பட்டுள்ளது.  இந்த மாநிலத்தில் பிஜேபி அரசாங்கம் ஆட்சியிலிருப்பது குறிப்பிடதக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக