Translate

சனி, 3 ஜூலை, 2021

 நேற்று இரவு ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது.கடந்த மே மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்  279 பாலஸ்தீனியர்கள்(69 குழந்தைகள் உட்பட) கொல்லப்பட்டனர்.சர்வதேச அழுத்ததிற்கு பின்பு கடந்த மே 10ம்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யபட்டது குறிப்பிடதக்கது. 

 வெனிசுலா அதிபர் நிகோலஸ் மாதுரோவையும் அந்நாட்டு முக்கிய ராணுவ அதிகாரிகளையும் கொலை செய்ய சதி நடப்பதாக மாதுரோ கூறியுள்ளார்.அமெரிக்காவின் தென்னக பிராந்திய கமாண்டர் கடந்த சில நாட்களாக பிரேசில் மற்றும் கொலம்பியாவில் தங்கி தமக்கேதிரான சதி திட்டத்தை தீட்டுவதாக 
நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2018 ஆண்டு டிரம்ப் ஆட்சியின் போது நிகோலஸ் மதுரோவின் மீது கொலை முயற்சி நடைபெற்றது எதிர்பாரா விதமாக மதுரோ அதிலிருந்து தப்பித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைவிதித்துள்ளது இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் தான் சோசலிச நிகோலஸ் மதுரோ அரசை தூக்கியேறிய ஏகாதிபத்திய சக்திகள் திட்டமிட்டுள்ளது.